search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பெஞ்சமின்"

    ரூ.42 லட்சம் மதிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் 760 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெஞ்சமின் வழங்கினார். #ADMK

    சென்னை:

    தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட மாநாடு காஞ்சீபுரத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சேம.நாராயணன் தொடங்கி வைத்தார்.

    மாநாட்டில் அமைச்சர் பெஞ்சமின் கலந்து கொண்டு மண்ணிலான கைவினை பொருட்கள் கண்காட்சியை திறந்து வைத்தார்.

    அதை தொடர்ந்து நலவாரியத்தில் உறுப்பினர்களாக இருக்கும் தொழிலாளர்கள் 760 பேருக்கு இலவச மின்சக்கரம், ஓய்வூதியம், நிவாரண உதவிகள், கல்விக் கடன் உள்பட சுமார் ரூ.42 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழா மலரையும் வெளியிட்டார்.

    பின்னர் அமைச்சர் பெஞ்சமின் மாநாட்டில் பேசும் போது, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், மாவட்டங்களில் மண்பாண்ட தொழில் செய்ய குளங்களில் மண் எடுப்பது, அனைத்து தொழிலாளர்களுக்கும் இலவச மின்சக்கரம் உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை உடனடியாக அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன் என்றார்.

    மாநாட்டில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் கணேசன், ஆம் ஆத்மி கட்சி வசீகரன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த இரா.கீதா, பழனி, ஹென்றி, சிட்டிபாபு, லீலாவதி குலாலர், சங்க நிர்வாகிகள் பாவலர் கணபதி, மகேஷ்கண்ணன், எஸ்.என். பழனி, மணி, பெருமாள் பத்தர், கவிஞர் தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். #ADMK

    ×